ஆனந்த் அமலதாஸ் சே.ச. சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ் பண்பாட்டு வரலாறு போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.