பெருங்கதையாடல்கள் பெரும்பாலும் படைப்பாளியின் புனைவு வழியாக படைக்கப்படுகிறது. அது சுயாதீதமான படைப்புச் சுதந்திரம். கோணங்களும் பார்வையும் படைப்பாளிக்கு உட்பட்டது. மூலப்பிரதி தொட முடியாத உயரங்களை அல்லது சொல்லத் தவறிய கவித்துவமான உள்விவகாரங்களை புனைவு வழியாக சாதிப்பதற்கான திறப்புவெளிகள் பல உண்டு. அது குறித்து நாம் பேசப் போவதில்லை. இப்போது உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் பிரதி அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கீழ்வெண்மணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையை மீண்டும் விவாதிக்கிறது.