புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு
கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
குமுதம் ,
ஆனந்த விகடன் மற்றும்
குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல்
சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர்
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப்
புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம்
ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள்
இந்தி ,
தெலுங்கு ,
கன்னடம் ,
ஜெர்மன் ,
பிரெஞ்சு ,
ஆங்கிலம் மற்றும்
சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது
நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான
நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.