
ஐந்தரை அடி உயரம்! ஒடிசலான ஆனால் அது தெரியாத தேகம்! சந்தன நிறம்! காண்பவரை ஒரு கனம் நின்று பார்க்கத் தூண்டும் முகவசியம்! அவரவர் வயதிற்கேற்ப அந்த முகவசியம் மிக்கவளைக் கொண்டாட எண்ணுமளவிற்கான பொலிவான தோற்றம்! தாய்,தகப்பன் அரவணைப்பின்றி வளர்ந்திருந்தாலும் அத்தனை பொலிவு! எழில்வாணி பெயருக்கு ஏற்றாற்போல எழிலில் எந்தக் குறையுமின்றி அந்தப் பிரம்மதேவனால் படைக்கப்பட்டவள். அதேபோல படிப்பிலும் புலி!..


