
இருவேறு முகங்கள், குணங்களும், வாழ்க்கையையும் காணும் ஒரு பெண்... கடந்து வந்த பாதை... நிதர்சனம் எல்லாம் கனவாய் கலைந்த போன பின்.. நிஜம் நிழலாகவும் நிழல் நிஜமாகவும் மாறிவிட அவள் இன்று யாராக? ? ? தன் மீது எறியப்பட்ட கற்களை படிக்கற்களாய் மாற்றிக் கொண்டவள். அவளின் முகம் உணர்ச்சிகளின் பெட்டகம். அழகில் அவள் அற்புதம். வண்ணமயமான வானவில் அவள் வாழ்க்கை. அவளை நேசிப்போரும் காதலிப்போரும் கணக்கிலடங்கா. இப்படியாகவே அவள். ஆனால் அது அவள் இல்லை. பின் அவள் யார்? பெண்மையின் சாரம்சம் உணர்த்த வருவபள். இருளை கிழித்தெறிந்த சூர்யனாய்... வருகிறாள். உணர்ச்சிபூர்வமாய் உளவியல் ரீதியாய் வலியோடும் கோபத்தோடும் வருகிறாள்... 'இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்... அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும்..' அவள் மரணத்தையும் வென்றெடுத்துவிட்டு வருகிறாள்.. படித்து பாருங்கள்



