
- நிர்மால்யா

- நிர்மால்யா
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது.
பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு. அடுத்தது கருணை. வேறொன்று துயரம். மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதை களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண்-பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள்.
<BookPick helps you discover the right books faster. Carefully selected reads, trusted recommendations, and smart picks for every kind of reader.
Copyright © BookPick. All Rights Reserved. Crafted By AshPro Technologies.
BookPick helps you discover the right books faster. Carefully selected reads, trusted recommendations, and smart picks for every kind of reader.
Copyright © BookPick. All Rights Reserved. Crafted By AshPro Technologies.
